உலகம் செய்தி

இஸ்ரேலின் போர் அமைச்சரவை கலைக்கப்பட்டது

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆறு உறுப்பினர்களை கொண்ட “போர் அமைச்சரவை”யை கலைக்க முடிவு செய்துள்ளார்.

அந்த அமைச்சரவையில் பலமாக இருந்த பென்னி காண்ட்ஸ் மற்றும் அவரது நண்பர் காடி ஐசென்கோட் ஆகியோர் வெளியேற முடிவு செய்ததை அடுத்து இஸ்ரேல் பிரதமர் இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் பின்னர் சிறிய மன்றம் ஒன்றின் மூலம் காஸா போர் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காசாவில் நடந்து வரும் போர் மூலோபாயமானது அல்ல என்ற அறிக்கையின் காரணமாக பென்னி காண்ட்ஸ் 8 நாட்களுக்கு முன்பு இஸ்ரேலின் போர் அமைச்சரவையிலிருந்து வெளியேறினார்.

எவ்வாறாயினும், போர் அமைச்சரவை கலைக்கப்பட்டதன் மூலம் இராணுவத்தின் கட்டளைச் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாது என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!