இன்றைய முக்கிய செய்திகள் மத்திய கிழக்கு

சிரியாவில் இஸ்ரேல் அட்டகாசம் – அமைதியை நிலைநாட்டும் தீவிர முயற்சியில் அமெரிக்கா

சிரியாவில் வன்முறைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு அமைதியை நிலைநாட்டும் வகையில் ஒரு புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அண்மையில், தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் அழைப்பை ஏற்று, தென் பகுதியிலிருந்து ராணுவத்தை பின்வாங்கத் தொடங்கியுள்ளதாக சிரியாவின் தற்காப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றும், சண்டைநிறுத்த ஒப்பந்தத்திற்கு கடைப்பிடிக்கும் அனைத்து தரப்புகளும் தங்கள் பங்கை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதல் தொடர்பாகப் பேசுவதற்காக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றத்தில் ஒரு அவசர சந்திப்பை நடத்த வேண்டும் என சிரியா கேட்டுள்ளது. இந்த சந்திப்பு இன்று பின்னேரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SR

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!