பெய்ரூட்டில் ஹெஸ்பொல்லா கட்டளை மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
பெய்ரூட் (Beirut) நகரில் உள்ள ஹெஸ்பொல்லா (Hezbollah) அமைப்பின் கட்டளை மையங்கள் நேற்று இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் 110 கட்டளை மையங்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
தாக்குதல்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு சேதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, சமீபத்திய நாட்களில் தெற்கு லெபனான் (Southern Lebanon) பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும்,
பாதுகாப்பு காரணங்களால் பெருமளவில் வெளியேற்ற உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.





