மத்திய கிழக்கு

முழு பலத்துடன் ஹிஸ்புல்லா இலக்குகளை தாக்குமாறு இஸ்ரேலிய பிரதமர் உத்தரவு!

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளை முழு பலத்துடன் தாக்குமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது பாதுகாப்புப் படையினருக்கு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், அமெரிக்காவும் மற்ற நட்பு நாடுகளும் போர்நிறுத்தத்தை பரிசீலிக்க தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளன.

நேற்று (26) நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் 92 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் ஹிஸ்புல்லாஹ் ட்ரோன் படையின் தலைவர் மொஹமட் சுரூர் என்பவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு பெய்ரூட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா உறுதிப்படுத்தினார்.

கடந்த திங்கட்கிழமை முதல் தெற்கு லெபனானில் உள்ள இலக்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது.

இதுவரை 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

(Visited 33 times, 1 visits today)

VD

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.