உலகம் செய்தி

கிழக்கு ஜெருசலேம் அருகே தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இஸ்ரேலியப் படை

கிழக்கு ஜெருசலேமுக்கு(Jerusalem) வடக்கே உள்ள அர்-ராம்(Ar-Ram) நகரில் இஸ்ரேலியப் படைகளால் ஒரு பாலஸ்தீனிய நபர் சுட்டுக் காயமடைந்ததாக பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட்(PRCS) அமைப்பு தெரிவித்துள்ளது.

எல்லை அருகில் இஸ்ரேலியப் படைகள் ஒரு தொழிலாளர் குழுவைத் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அவர்களில் ஒருவர் காயமடைந்ததாகவும் வஃபா(Wafa) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனிய பொது தொழிற்சங்க கூட்டமைப்பின் கூற்றுப்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இஸ்ரேலியப் படைகளால் 15 பாலஸ்தீனிய தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் இஸ்ரேலிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தவறாக நடத்தப்பட்டுள்ளனர்.

2023ம் ஆண்டு அக்டோபர் முதல், 42 தொழிலாளர் உயிரிழந்துள்ளதாகவும் 32,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாலஸ்தீனிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!