மத்திய கிழக்கு

காசாவில் உணவு மையங்களுக்கு அருகே துப்பாக்கி சூடு நடத்திய இஸ்ரேல் படையினர் ;38 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காசாவில் உணவு விநியோக மையங்கள் அமைந்துள்ள பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 38 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காசா பிரதேசத்தின் தெற்கில் உள்ள உணவு விநியோக மையங்களில் நடந்த புதிய துப்பாக்கிச் சூடுகளில் 38 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் வழியாக ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் நாள்தோறும் உணவு மையங்களை நோக்கிச் செல்கின்றனர். அவர்கள் மீது இதற்கு முன்பும் பலமுறை துப்பாக்கிச் சூடுகள் நடந்து பலர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இன்று (16) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த இஸ்ரேலிய படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இன்று நடந்த இறப்புகள் குறித்து இஸ்ரேலிய ராணுவம் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. முந்தைய சந்தர்ப்பங்களில் பாதுகாப்புப் படையினர், தங்கள் நிலைகளை நெருங்கும் சந்தேக நபர்கள் மீது எச்சரிக்கை கருதி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.