மத்திய கிழக்கு

காசாவில் இராணுவ நடவடிக்கைகளை விரிவுப்படுத்தி கையகப்படுத்த இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல்!

காசா பகுதியில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமைக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்துள்ளது.

இந்நிலையில் காசாவில் இராணுவ நடவடிக்கைகளை மேலும் விரிவுப்படுத்த இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இஸ்ரேலில் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை பல மணி நேரம் நீடித்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.

“ஹமாஸை தோற்கடிப்பதற்கான பிரதமரின் முன்மொழிவை பாதுகாப்பு அமைச்சரவை அங்கீகரித்துள்ளது” என்று இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“போர் மண்டலங்களுக்கு வெளியே உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதை உறுதி செய்யும் அதே வேளையில், காசா நகரத்தை கையகப்படுத்துவதற்கு ஐ.டி.எஃப் தயாராகும்.” எனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.