ஹர்முஸ் கப்பல் பாதுகாப்பு- ஈரான் , ஈராக் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்கள் இயக்கம் குறித்து ஈரான் மற்றும் ஈராக் இடையே புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக ஈராக் தெரிவித்துள்ளது.
ஹர்முஸ் நீரிணை வழியாக ஈரானின் எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்லும் வகையில் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக ஈராக் அமைச்சர் ஹயான் அப்துல்-கனி (Hayan Abdul-Ghani) தெரிவித்துள்ளார்.
அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில் இந்த முன்னேற்றம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இதேவேளை, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அராக்சி, “ஹோர்முஸ் நீரிணை திறந்தே உள்ளது ஆனால் எங்கள் எதிரிகளுக்கு அது மூடப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.





