மத்திய காசாவில் துப்பாக்கிச்சூடு நடத்திய இஸ்ரேல் – 17 பேர் பலி!

மத்திய காசாவில் அமெரிக்க ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) உதவி விநியோக தளத்திற்கு அருகே இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 17 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என்று உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் மத்திய காசாவின் நுசைரத் முகாமில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனைக்கும், வடக்கில் அமைந்துள்ள காசா நகரில் உள்ள அல்-குட்ஸ் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக மருத்துவ பணியாளர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை GHF தளங்களுக்கு செல்லும் பாதைகளை அணுகுவதைத் தவிர்க்க பாலஸ்தீனியர்களை எச்சரித்தது, இந்தப் பகுதிகளை உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மூடிய இராணுவ மண்டலங்களாக நியமித்தது.