ஈரானின் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து இஸ்ரேல் பாரிய தாக்குதல்
ஈரானின் தலைநகர் தெஹ்ரான், இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் தெற்கு ஈரான் பகுதிகளை இலக்குவைத்து புதிய தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஈரானின் உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு பாரியளவிலான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு டெலிகிராம் ஊடாக வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தாக்குதல்களின் விபரங்கள் குறித்து மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.





