ஈரான் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தும் இஸ்ரேல் – தெஹ்ரான் பற்றி எரியும் என எச்சரிக்கை

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலியக் குடிமக்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்தால், தெஹ்ரான் பற்றி எரியும் என்று இஸ்ரேல் எச்சரித்தது.
இஸ்ரேலிய ராணுவம், ஈரானில் 150க்கும் அதிகமான இடங்களைக் குறிவைத்து தாக்கியது.
அண்மைய தாக்குதல்களில் மேலும் மூன்று ஈரானிய அணுசக்தி விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாய் கூறப்பட்டது. இதுவரை 9 அறிவியலாளர்கள் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர்.
பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பெறும் ஈரானின் ஆற்றலுக்கு இது பேரடி என்று இஸ்ரேல் கூறியது.
இதற்கிடையே இன்று காலை ஈரான் சுமார் 200 ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. இதில் குறைந்தது மூவர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர்.
இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலுக்கு அது பதிலடி என்று ஈரான் கூறியது.
இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்கு உதவினால் வட்டாரத்தில் உள்ள அந்நாடுகளின் படைத் தளங்களும் கப்பல்களும் குறிவைக்கப்படும் என்று பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகியவற்றை ஈரான் எச்சரித்துள்ளது.