இஸ்லாமியர்களின் புனித பெருநாள் அன்று கொடூரமாக தாக்கிய இஸ்ரேல் – 95 பேர் பலி!

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் குறைந்தது 95 பேரை இஸ்ரேலியப் படைகள் கொன்று குவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசா நகரில் குண்டுவீச்சுக்கு உள்ளான குடியிருப்பு கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணியாளர்கள் விரைந்து சென்றதாகவும், மேலும் பல பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் செய்தி குறிப்புகள் தெரிவித்துள்ளன.
சனிக்கிழமை கட்டிடத்தைத் தாக்குவதற்கு முன்பு இஸ்ரேலிய இராணுவம் “எந்த எச்சரிக்கையையும் விடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பல பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அக்கம் பக்கத்தில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“எங்கள் குழந்தைகளை உற்சாகப்படுத்தவும், ஈத் கொண்டாட அவர்களுக்கு ஆடை அணிவிக்கவும் எழுந்திருப்பதற்குப் பதிலாக,” “நாங்கள் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்களை எடுத்துச் செல்ல எழுந்திருக்கிறோம்” என்று பாலஸ்தீனியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.