காசாவின் மேற்கு கரையில் 1000 வீடுகளை கட்டுவதற்கான டெண்டரை அறிவித்த இஸ்ரேல்!

ஆக்கிரமிக்கப்பட்ட காசாவின் மேற்குக் கரையில் கிட்டத்தட்ட 1,000 கூடுதல் குடியேறி வீடுகளைக் கட்டுவதற்கான டெண்டரை இஸ்ரேல் வெளியிட்டதாக குடியேற்ற எதிர்ப்பு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
974 புதிய வீட்டு அலகுகளின் மேம்பாடு எஃப்ராட் குடியேற்றத்தின் மக்கள் தொகையை 40% அதிகரிக்க அனுமதிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குழுவின் குடியேற்ற கண்காணிப்பை வழிநடத்தும் ஹாகித் ஆஃப்ரான், ஒப்பந்த செயல்முறை மற்றும் அனுமதிகளை வழங்கிய பிறகு கட்டுமானம் தொடங்கலாம் என்றும், இது குறைந்தது ஒரு வருடம் ஆகலாம் என்றும் கூறினார்.
500,000 க்கும் மேற்பட்ட குடியேறிகள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வாழ்கின்றனர், இது சுமார் 3 மில்லியன் பாலஸ்தீனியர்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)