இலங்கை

ரணில், சஜித் சங்கமம் சாத்தியமா?

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தின்கீழ் தனிக்கட்சியாக ஒன்றிணைவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாரில்லை என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்தார்.

அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒன்றிணைப்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கமாகும். இந்த நடவடிக்கையானது தனியொரு கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்கல் அல்ல எனவும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி இடம்பெற்றுவருகின்றது.

இவ்வாறு இரு தரப்புகளும் இணைந்து மாகாணசபைத் தேர்தலை பொதுபட்டியலின்கீழ் எதிர்கொள்வதற்குரிய ஏற்பாடும் இடம்பெற்றுவருகின்றது என தகவல் வெளியாகியுள்ள நிலையிலேயே ஐ.தே.க உறுப்பினரான அஜித் மானப்பெரும மேற்கண்டவாறு கூறினார்.

அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் நோக்கிலேயே ஹரின் பெர்ணான்டோவுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

(Visited 2 times, 2 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்