இலங்கை

மற்றொரு சூறாவளி உருவாகிறதா? வானிலை ஆய்வுத் துறை விளக்கம்!

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்யும் என்பதால், இந்த மாதம் இலங்கையில் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை அதிகாரியான  மெரில் மெண்டிஸ்  நேற்று தெரிவித்தார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், டிசம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து பருவமழை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு குறைந்த அழுத்த அமைப்பு அல்லது சூறாவளி புயல் உருவாகும் என்ற செய்திகளையும் அவர் மறுத்துள்ளார்.

இதற்கிடையில் நாட்டின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டத்திலும் வரும் நாட்களில் மழை பெய்யும் என்று வானிலை  முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!