ஈரானின் பெட்ரோ இரசாயன வளாகம் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளானது
தெற்கு பார்ஸில் (South Pars, Iran) உள்ள ஈரானின் பெட்ரோ இரசாயன வளாகம் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் (IRGC – Islamic Revolutionary Guard Corps) இணைந்த செய்தி நிறுவனமான தஸ்னிம் (Tasnim) இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
இந்த வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெற்கு பார்ஸ் (Pars) உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கொண்ட பகுதியாகும், இதில் கட்டார் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் தனித்தனி ஆலைகளை இயக்கி வருகின்றனர்.





