மன்னிப்பு கோரினார் ஈரான் ஜனாதிபதி
ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் சனிக்கிழமை அண்டை நாடுகளுக்கு மன்னிப்பு கோரினார்.
ஈரானின் நடவடிக்கைகள் அண்டை நாடுகளை நேரடியாக பாதிக்காத விதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களின் பின்னணி ஈரானின் சொந்த தலைமை பலவீனமடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளர்.
கடந்த சில நாட்களில் ஈரானிய ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் வளைகுடா அரபு நாடுகளை நோக்கி பறந்து சென்ற நிலையில்,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் “மிகவும் கடுமையாக தாக்கப்படும்” என்று எச்சரித்தார்.
இதேவேளை, பெஷேஷ்கியன் தனது மன்னிப்பில், அண்டை நாடுகளை எதிர்கொள்ளக் கூடாது என்றும்,
இராட்சதத் தாக்குதல்களில் மட்டுமே பதிலளிக்கப்படும் என்றும் கூறினார்.
சில மணிநேரங்களுக்கு முன்னர், ஈரானிய ஏவுகனைகள் மற்றும் ட்ரோன்களின் அலை டுபாய் சர்வதேச விமான நிலையத்தில்
விமானங்களைக்கு இடையூறை ஏற்படுத்தியது
அதேபோல், ஒரு சவுதி எண்ணெய் நிலையமும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பஹ்ரைனில் பாதுகாப்புக்காக தப்பி ஓடிய மக்களும் இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டனர்.




