இலங்கையிடம் ஈரான் தூதுவர் விடுக்கும் அவசர கோரிக்கை!
“சர்வதேச சட்ட மீறல்கள் குறித்து இலங்கை மௌனம் காக்க கூடாது.”என்று இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஸ் (Alireza Delkhosh) தெரிவித்தார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அணிசேரா வெளியுறவுக் கொள்கையை பின்பற்றும் இலங்கை தற்போதைய சூழ்நிலையில், என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் என தூதுவரிடம் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர்,
இலங்கை ஒரு நடுநிலையான நாடு. எனினும், சர்வதேச சட்ட மீறல் குறித்து இலங்கை அமைதியாக இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல.
நடுநிலைமை என்பது இந்த நாடு போரில் ஈடுபட்ட ஒரு தரப்பினருடன் இணைந்து செயல்படக்கூடாது என்பதாகும்.” என்று குறிப்பிட்டார்.
எனினும், அடிப்படை சர்வதேச விதிமுறைகள் மீறப்படுவதைக் காணும்போது, இந்த நாடு அமைதியாக இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல.
காசாவில் குழந்தைகளைக் கொல்வது போல,ஈரானில் குழந்தைகளைக் கொல்வதை இலங்கை ஏற்றுக்கொள்கிறதா என்பதை அரசாங்கம் தெளிவாகக் கூறும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
காசாவில் படுகொலைகள் விடயத்தில் அமைதியாக இருக்க வேண்டும் என்று சொல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதா?
இந்த நாடு காசாவில் படுகொலையைக் காணும்போது அது அமைதியாக இருக்க வேண்டுமா?
அமைதியாக இருப்பதற்கும் நடுநிலை நாடுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.” என ஈரான் தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.




