டுபாயில் உள்ள அபுதாபி துறைமுகப் பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு ஈரான் அவசர எச்சரிக்கை
டுபாயில் உள்ள அபுதாபி துறைமுகப் பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு ஐக்கிய அரபு அமீரகம் குடியிருப்பாளர்களுக்கு ஈரான் எச்சரித்துள்ளது.
டுபாயில் உள்ள ஜெபல் அலி (Jebel Ali) துறைமுகம், அபுதாபியில் உள்ள கலீஃபா (Khalifa) துறைமுகம் மற்றும் புஜைரா (Fujairah) துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூடும் இடங்களில் அமெரிக்க படைகள் இருப்பதால், அந்த இடங்கள் இலக்குகளாக மாறலாம் என கூறப்பட்டள்ளது.
மேலும் அடுத்த சில மணிநேரங்களில் அந்த பகுதிகள் இலக்கு வைக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.





