இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்தால் எதிர் வினை கடுமையாக இருக்கும் : எச்சரிக்கும் ஈரான்!

இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தொடர்ந்தால் ஈரானின் எதிர்வினை “மிகவும் தீர்க்கமானதாகவும் கடுமையானதாகவும்” இருக்கும் என்று ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் எச்சரித்துள்ளார்.
ஈரானின் இராணுவம் இதுவரை “வலுவாகவும் பொருத்தமானதாகவும்” பதிலளித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
ஈரான் ஒரே இரவில் இஸ்ரேல் மீது குறைந்தது இரண்டு அலை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது, இது முந்தைய இரவை விட அதிக உயிரிழப்புகளையும் சேதத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.
இதேவேளை அமெரிக்காவும் ஒப்பந்தம் ஒன்று எட்டுமாறு ஈரானிடம் வலியுறுத்தியுள்ளது அவ்வாறு இல்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.
(Visited 2 times, 2 visits today)