அமைச்சர் விஜித மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் இடையே கலந்துரையாடல்
பிராந்திய முன்னேற்றங்கள் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்க ஈரானிய வெளியுறவு அமைச்சர் செயித் அப்பாஸ் அரக்ச்சி (Seyed Abbas Araghchi ) வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத்துடன் நேற்று மாலை தொலைபேசியில் உரையாடினார்.
இந்த அழைப்பின் போது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக நடத்திய இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சமீபத்திய நிலைமை குறித்து அரக்ச்சி இலங்கை அமைச்சருக்கு விளக்கினார்.
மார்ச் 4 இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து ஈரானிய போர்க்கப்பலான டெனாவின் குழுவினருக்கு உதவுவதில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஈரானிய வெளியுறவு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த 84 மாலுமிகளின் உடல்களை மீட்க உதவியதற்கும், அவர்களின் உடல்களை அவர்களின் தாய்நாட்டிற்கு கொண்டு வர உதவியதற்கும் இலங்கைக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த உரையாடலின் போது ஈரான் மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பான விடயங்களையும் இரு அமைச்சர்களும் விவாதித்ததாக ஈரானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.




