இஸ்ரேலின் இணைய தொழில்நுட்ப மையங்கள், ஆயுத உற்பத்தி ஆலைகளை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
இஸ்ரேலின் இணைய தொழில்நுட்ப மையங்களையும், ஆயுத உற்பத்தி ஆலைகளையும் இலக்குவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானிய இராணுவத்தை மேற்கோள் காட்டி, தஸ்னிம் செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இஸ்ரேலிய காவல்துறைக்கு சொந்தமான இணைய மையங்கள் மற்றும் ஆயுத உற்பத்தி வசதிகள் தாக்குதலுக்கு இலக்காகியதாக கூறப்படுகிறது.
“இன்று காலை முதல், சியோனிச ஆட்சியின் இணைய தொழில்நுட்ப மையங்களையும், ரஃபேல் ஆயுத உற்பத்தி வளாகத்தையும் ஆளில்லா விமானங்கள் மூலம் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.





