ஈரான் பதிலடி: கத்தாரின் எரிவாயு சுத்திகரிப்பு நிலையம்மீது தாக்குதல்!
ஈரானின் எரிவாயு தளம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, கத்தார் நாட்டின் எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தை ஈரான் தாக்கியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலின் இந்தத் திட்டத்தில் அமெரிக்காவிற்கு எவ்விதப் பங்கும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
கத்தார் நாட்டின் மீது எந்தத் தவறும் இல்லாதபோது ஈரான் அங்குத் தாக்குதல் நடத்தியது நியாயமற்றது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இனிவரும் காலங்களில் ஈரான் கத்தாரைத் தாக்கினால், அமெரிக்கா ஈரானின் எரிவாயு வளங்களை முற்றிலுமாக அழித்துவிடும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்த மோதல் மேலும் தீவிரமடைவதைத் தவிர்க்கவும், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதுகாக்கவும் டிரம்ப் இத்தகைய கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.




