ஈரானில் நான்கு வயது வளர்ப்பு மகளைக் கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
வடமேற்கு ஈரானில்(Iran) நான்கு வயது வளர்ப்பு மகளைக் கொன்றதற்காக ஒரு பெண்ணை தூக்கிலிட்டதாக நீதித்துறை தெரிவித்துள்ளது.
அவா(Ava) என அடையாளம் காணப்பட்ட குழந்தை, தனது மாற்றாந்தாய் ஏற்படுத்திய காயங்களால் டிசம்பர் 2023ல் இறந்ததாக நீதித்துறையின் மிசான்(Mizan) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு, அந்தப் பெண்ணுக்கு மார்ச் 2024 தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மேற்கு அஜர்பைஜான்(Azerbaijan) மாகாணத்தின் தலைமை நீதிபதி நாசர் அதாபதி(Naser Atapati), விடியற்காலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குழந்தையின் பாதுகாப்பு கரங்களுக்காக அதிகாரிகள் தூக்கிலிடப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் வயது குறிப்பிடவில்லை.
சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமைக் குழுக்களின் கூற்றுப்படி, சீனாவிற்குப்(China) பிறகு மரண தண்டனையை அதிகமாகப் பயன்படுத்தும் இரண்டாவது நாடு ஈரான் ஆகும்.





