ஈரானில் கடந்த ஆண்டு 975 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ஈரான் கடந்த ஆண்டு 975 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது என்று இரண்டு மனித உரிமைகள் குழுக்கள் தெரிவித்துள்ளது.
2008 ஆம் ஆண்டு ஈரானில் மரண தண்டனையை பதிவு செய்யத் தொடங்கியதிலிருந்து இந்த எண்ணிக்கை மிக உயர்ந்தது என்று நார்வேயை தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் (IHR) மற்றும் பிரெஞ்சு குழுவான Together Against the Death Penalty (ECPM) தெரிவித்தன.
இந்த எண்ணிக்கை “2024 ஆம் ஆண்டில் இஸ்லாமிய குடியரசில் மரண தண்டனையைப் பயன்படுத்துவதில் ஒரு பயங்கரமான அதிகரிப்பை வெளிப்படுத்துகிறது” என்று ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஈரான் மரண தண்டனையை “அரசியல் ஒடுக்குமுறையின் மைய கருவியாக” பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினர்.
“இந்த மரண தண்டனைகள் இஸ்லாமிய குடியரசு தனது அதிகாரத்தின் மீதான தனது பிடியைத் தக்க வைத்துக் கொள்ள அதன் சொந்த மக்களுக்கு எதிரான போரின் ஒரு பகுதியாகும்” என்று IHR இயக்குனர் மஹ்மூத் அமிரி-மொகதாம் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் பதிவான 834 மரணதண்டனைகளை விட 17 சதவீதம் அதிகமாகும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
தூக்கிலிடப்பட்ட 975 பேரில், நான்கு பேர் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டனர், 31 பேர் பெண்கள், இது கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.