ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டதிற்கு அழைப்பு விடுத்த ஈரான்

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் “கொடூரமான தாக்குதல்கள் மற்றும் சட்டவிரோத படைப் பயன்பாட்டை” தொடர்ந்து , ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் தூதர் அவசர பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தூதர் அமீர் சயீத் இரவானி, சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தின் கீழ் அமெரிக்காவை பொறுப்புக்கூற வைக்க ஐ.நா.வின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பு “தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“ஈரான் இஸ்லாமிய குடியரசு ஜூன் 13 அன்று ஈரானின் அமைதியான அணுசக்தி தளங்கள் மற்றும் வசதிகளுக்கு எதிராக இஸ்ரேலிய ஆட்சி நடத்திய பெரிய அளவிலான இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த தூண்டுதலற்ற மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஆக்கிரமிப்புச் செயல்களை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறது ” என்று கடிதம் தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)