ஈரானில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து – சம்பவ இடத்திலேயே 15 பேர் பலி!

ஈரானின் தெற்குப் பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மாகாணத்தின் தலைநகரான ஷிராஸ் நகரின் தெற்கில் நடந்த விபத்தில் இதுவரை 15 பேர் இறந்ததாக உறுதிசெய்யப்பட்டதாகவும், 27 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஃபார்ஸ் மாகாணத்தின் அவசரகால அமைப்பின் தலைவர் மசூத் அபேத் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு 11 ஆம்புலன்ஸ்கள் மற்றும் இரண்டு ஆம்புலன்ஸ் பேருந்துகள் அனுப்பப்பட்டதாகவும் அபேத் கூறினார்.
ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 17,000 பேர் உயிரிழக்கும் நிலையில், சாலை மற்றும் தெரு விபத்துக்களில் ஈரான் முன்னணியில் உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை புறக்கணித்தல், பழைய வாகனங்களின் பயன்பாடு மற்றும் போதுமான அவசர சேவைகள் இல்லாததே இதற்குக் காரணம்.
(Visited 2 times, 2 visits today)