செய்தி விளையாட்டு

IPL Match 67 – 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அதிரடி வெற்றி

18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் இன்று பகல் நேர ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ஆயுஷ் மாத்ரே – கான்வே களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 17 பந்துகளில் 34 ரன்கள் அடித்து அவுட்டானார்.

அடுத்ததாக களமிறங்கிய உர்வில் படேல் 19 பந்துகளில் 37 ரன்கள் விளாசி அவுட்டானார். மறுபுறம் பொறுப்புடன் விளையாடிய கான்வே அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய டிவால்ட் பிரேவிஸ் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 231 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் 18 ஓவர்கள் முடிவில் 147 ரன்களுக்கு குஜராத் அணி ஆல் அவுட்டானது. இதன்மூலம் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

(Visited 2 times, 2 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி