செய்தி விளையாட்டு

IPL Match 66 – டெல்லி அணிக்கு 207 ஓட்டங்கள் இலக்கு

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வரும் 66வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலாவதாக களமிறங்கிய பஞ்சாப் அணியின் சார்பில் பிரியான்ஸ் ஆரியா மற்றும் பரப்சிம்ரன் சிங் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் ஆர்யா 6 ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கி அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்ட ஜோஸ் இங்லீஸ் 32 (12) ரன்களில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 33 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்த ஸ்டோய்னிஸ் அதிரடியாக ரன்களை சேர்த்தார். இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 53 (34) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

முடிவில் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது.

(Visited 1 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி