செய்தி விளையாட்டு

IPL Match 62 – ராஜஸ்தான் அணிக்கு 188 ஓட்டங்கள் இலக்கு

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் – சென்னை அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரே, கான்வே களமிறங்கினர். இதில் கான்வே 10 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 20 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து பிரேவிஸ் மற்றும் துபே ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரை சதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரேவிஸ் 42 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில் துபே 39 ரன்னில் அவுட் ஆனார். இறுதிவரை போராடிய தோனி 17 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் சென்னை அணி 20 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் யுத்வீர் சிங் சரக், மத்வால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

(Visited 3 times, 3 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி