செய்தி விளையாட்டு

IPL Match 44 – கொல்கத்தா அணிக்கு 202 ஓட்டங்கள் இலக்கு

ஐபிஎல் தொடரின் 44ஆவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி அந்த அணியின் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரில் இருந்து இருவரும் வாணவேடிக்கை நிகழ்த்தினர். பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்கவிட்டனர்.

10ஆவது ஓவரின் 4ஆவது பந்தை சிக்சருக்கும், 5ஆவது பந்தை பவுண்டரிக்கும் விரட்டி ஆர்யா 27 பந்தில் அரைசதம் அடித்தார். சுனில் நரைன் வீசிய அடுத்த ஓவரில் பஞ்சாப் 3 சிக்சர் விளாசியது.

அடுத்த ஓவரில் பவுண்டரி அடித்து 38 பந்தில் பிரப்சிம்ரன் சிங் அரைசதம் அடித்தார். வருண் சக்ரவர்த்தி வீசிய 14ஆவது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார்.

பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. ஷ்ரேயாஸ் அய்யர் 16 பந்தில் 25 ரன்களுடனும், இங்கிலீஷ் 6 பந்தில் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

(Visited 24 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content