செய்தி விளையாட்டு

IPL Match 38 – சென்னை அணியை இலகுவாக வீழ்த்திய மும்பை

ஐபிஎல் தொடரின் 38வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். அவருக்கு சூர்யகுமார் யாதவ் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் அரை சதம் கடந்தனர்.

இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 15.4 ஓவரில் 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 76 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

இது மும்பைக்கு கிடைத்த 4வது வெற்றி ஆகும். சென்னை அணியின் 6வது தோல்வி இதுவாகும்.

(Visited 2 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி