செய்தி விளையாட்டு

IPL Match 28 – ராஜஸ்தானை வீழ்த்திய பெங்களூரு அணி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஜெய்ப்பூரில் அரங்கேறும் 28வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது.

இரு அணிகளுக்கு இடையே போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கி விளையாடியது.

இதில், அதிகபட்சமாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 75 ரன்கள், துருவ் ஜூரல் 35, ரியான் பராங் 30 ரன்கள், சஞ்சு சாம்சன் 15 ரன்கள் எடுத்தனர்.

இந்த ஆட்டத்தில் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 173 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது.

இதன் ஆட்டத்தின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.

174 ரன்கள் இலக்கை 17.3 ஓவர்களில் எட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

(Visited 41 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி