செய்தி விளையாட்டு

IPL Match 23 – பஞ்சாப் அணிக்கு 183 ஓட்டங்கள் இலக்கு

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 23 ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

சன்ரைசர்ஸ் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா முறையே 21 மற்றும் 16 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அடுத்துவந்த ஏய்டன் மார்க்ரம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்த சன்ரைசர்ஸ் அணிக்கு நிதிஷ் குமார் ரெட்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டார். இவர் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ராகுல் திரிபாதி 11 ரன்களிலும் கிளாசன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அப்துல் சமத் சிறப்பாக ஆடி 25 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

போட்டி முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை குவித்துள்ளது.

பஞ்சாப் சார்பில் சிறப்பாக பந்துவீசிய அர்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் பட்டேல் மற்றும் சாம் கர்ரன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ரபாடா 1 விக்கெட் வீழ்த்தினார்.

(Visited 17 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி