செய்தி விளையாட்டு

IPL Match 14 – குஜராத் அணிக்கு 170 ஓட்டங்கள் இலக்கு

ஐபிஎல் தொடரின் 14ஆவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆர்சிபி- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்தி வருகின்றன.

டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சு தேர்வு செய்தார்.

அதன்படி ஆர்சிபி அணியின் பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர் இரண்டாவது ஓவரில் விராட் கோலி ஆட்டம் இழந்தார்.

அதன்பின் லிவிங்ஸ்டன்- சித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவுக்கு தாக்குப் பிடித்து விளையாடியது. இதனால் 420க்கு 4 என இருந்த ஆர்சிபி 94க்கு 5 என ஆகியது.

இந்த ஓவரில் ரஷித் கான் 3 சிக்ஸ் கொடுக்க ஆர்சிபி அணிக்கு 20 ரன்கள் கிடைத்தது. 3 சிக்சரையும் அடித்த லிவிங்ஸ்டன் 39 பந்தில் 5 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

ஆர்சிபி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்துள்ளது. டிம் டேவிட் 18 பந்தில் 32 ரன்கள் எடுத்தார்.

(Visited 31 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி