செய்தி விளையாட்டு

IPL Match 03 – மும்பை அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் 2025 சீசனின் 3வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்கத்தில் ரோகித் சர்மா டக் அவுட் ஆனார். தொடர்நது ரிக்கல்டன் 13 ரன்களில் வெளியேறினார்.

சூர்யகுமார் யாதவ் 29 ரன்களும், திலக் வர்மா 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த வீரர்கள் சென்னை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 155 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 155 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் திரிபாதி 2 ரன்களில் அவுட் ஆனார். ருதுராஜ் கெய்க்வாட் 53 ரன்களில் வெறியேறினார்.

ரவீந்திர ஜடேஜா 17 ரன்களில் வெறியேறினார். ராசின் ரவீந்திரா 65 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் நின்றார்.

இறுதியில் சென்னை அணி 19.1 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு இழந்து 158 ரன்கள் எடுத்தது.

இதனால் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

(Visited 1 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி