இலங்கை செய்தி

தொழில் வாய்ப்புக்காக சீனாவுக்கு ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் நடைபெற்ற வர்த்தக, வர்த்தக மற்றும் சுற்றுலா அமர்வில் பங்கேற்றுள்ளார்.

இலங்கையில் முதலீடுசெய்ய உள்ள பல சீன வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கையின் முன்னணி வர்த்தகர்கள் குழுவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை படிப்படியாக போட்டி நிறைந்த பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், எதிர்கால வர்த்தக வாய்ப்புகளுக்கான தளமாக இலங்கையை மாற்றுமாறு சீன வர்த்தகர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவையும் சந்தித்துள்ளார்.

இந்து சமுத்திரத்தின் அடையாளத்தை வலுப்படுத்தி இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசிய நாடுகள் பலவற்றுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்ளவும் இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேலும் முறைப்படுத்தவும் இலங்கை செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு உரையாற்றிய இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ, இந்தோனேசியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்துவது மிகவும் காலத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாகிஸ்தானின் தற்காலிக பிரதமர் அன்வர் உல் ஹக் கக்கரை சந்தித்து தனது சீன விஜயத்துடன் இணைந்து கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையும் பாகிஸ்தானும் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவது தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content