வெலிகம துப்பாக்கி சூடு தொடர்பில் விசாரணை ஆரம்பமாகியுள்ளது ; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

” வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணை ஆரம்பமாகியுள்ளது.” என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” காவல்துறை விசாரணைகளின் பிரகாரம் வெளியாகும் தகவல்களை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இன்று சபையில் வெளியிடக்கூடும்.” எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
அதேவேளை, வெலிகம பிரதேச சபை தவிசாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் மூன்று காவல்துறை குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன என்று தெரியவருகின்றது.
(Visited 4 times, 4 visits today)