இலங்கை

இலங்கையில் மின் கட்டணத்தை செலுத்த பல புதிய வழிகள் அறிமுகம்!

இலங்கை மின்சார சபையானது மின்சார பாவனையாளர்களுக்கு புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கான பல வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் உண்டியல் கொடுப்பனவுகளை மிகவும் திறமையாக மேற்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, CEBCare மொபைல் செயலி ஊடாகவும், இணைய வங்கிச் சேவைகள் ஊடாகவும், CEB இணையத்தளத்தின் ஊடாகவும், இலங்கை தபால் அலுவலகம், CEB மற்றும் வங்கி KIOSK இயந்திரங்கள், Cargills, Keel’s போன்ற பல்பொருள் அங்காடிகள் மற்றும் mCash மூலமாகவும் மின் கட்டணங்களைச் செலுத்தும் வசதி நுகர்வோருக்கு உள்ளது.

மின்சார கட்டணங்கள் தொடர்பில் எழும் பிரச்சினைகள் தொடர்பில் CEB அழைப்பு நிலைய இலக்கமான 1987 ஐப் பார்க்குமாறும் இலங்கை மின்சார சபை நுகர்வோருக்கு அறிவிக்கிறது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content