இரு மத்திய ஆப்பிரிக்க தலைவர்களுக்கு தண்டனை விதித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் நாட்டின் உள்நாட்டுப் போரின் போது முஸ்லிம் பொதுமக்களுக்கு எதிராக பல போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்காக, கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இரண்டு தலைவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றவாளிகளாகக் கண்டறிந்து, ஒவ்வொருவருக்கும் 12 வருடத்திற்கும் மேலான சிறைத்தண்டனை விதித்ததுள்ளது.
CAR கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பேட்ரிஸ்-எட்வார்ட் நைசோனா, “ராம்போ” என்று அழைக்கப்படும் கிளர்ச்சித் தலைவரான ஆல்ஃபிரட் யெகாடோம் ஆகியோருடன் சேர்ந்து, கொலை, சித்திரவதை மற்றும் பொதுமக்களைத் தாக்குதல் உள்ளிட்ட அட்டூழியங்களில் ஈடுபட்டதற்காக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டனர்.
20 போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக யெகாடோமுக்கு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக 28 குற்றச்சாட்டுகளுக்கு நைசோனாவுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பிரதானமாக முஸ்லிம் செலேகா கிளர்ச்சியாளர்கள் அந்த ஆண்டு மார்ச் மாதம் தலைநகர் பாங்குயை முற்றுகையிட்டு, அப்போதைய ஜனாதிபதி பிரான்சுவா போசிஸை பதவி நீக்கம் செய்த பின்னர், 2013 இல் உருவாக்கப்பட்ட ஆன்டி-பலாகா என்று அழைக்கப்படும் ஒரு போராளிக்குழுவில் மூத்த தலைவர்களாக இருந்ததில் இருந்து இந்த குற்றச்சாட்டுகள் எழுகின்றன.