அரசியல் இலங்கை செய்தி

முடிவுக்கு வந்தது உள்ளக மோதல்: வழக்குகள் வாபஸ்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவராக முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபாலடி சில்வா அணியுடன் சமரசரம் ஏற்பட்டுள்ள நிலையிலேயே அவருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கட்சிக்கு எதிராக தொடுக்கப்பட்ட ஆறு வழக்குகளை விஜயதாச ராஜபக்ச மீளப்பெற்றுள்ளார்.

கொழும்பு மாவட்ட தலைவர் பதவிக்கு அப்பால் மஹரகம தொகுதி அமைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த நிறைவேற்றுக்குழு கூட்டத்தின்போது அவருக்கு சிரேஸ்ட உப தலைவர் பதவி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை, சுதந்திரக் கட்சிக்கு செல்வது பற்றி விஜயதான ராஜபக்ச தனக்கு தெரியப்படுத்தினார் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தனது தலைமைப் பதவிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்ட பின்னர், பதவி விலகி அப்பதவியை விஜயதாச ராஜபக்சவுக்கு மைத்திரி வழங்கி இருந்தார்.

இதற்கு நிமல் சிறிபாலடி சில்வா தரப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sanath

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!