இலங்கை

மதுபோதையில் நபர் ஒருவர் செய்த மோசமான செயல் : பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி

மதுபோதையில் வந்த நபர் மருதங்கேணியில் விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்க முற்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மருதங்கேணி நித்தியவெட்டை பகுதிக்கு கடமை நிமித்தம் தனது மோட்டார் சைக்கிளில் சென்று , மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்தி விட்டு, வீடொன்றில் விசாரணை நடவடிக்கையை மேற்கொண்டபோது , வீதியில் நின்ற மோட்டார் சைக்கிளுக்கு மதுபோதையில் வந்த நபர் தீ வைக்க முற்பட்டுள்ளார்.

இதனை பொலிஸ் உத்தியோகத்தர் அவதானித்ததும் குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளார். விரைந்து சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் தீயை அணைத்துள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிளின் என்ஜின் பகுதி சிறிதளவு சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.-

 

 

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!