இலங்கை செய்தி

உளவுத்துறை எச்சரிக்கை – ஞானசார தேரர் பாதுகாப்பு கோரிக்கை!

தனக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதாள குழுக்களிடமிருந்து தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த இரு அதிகாரிகளை தமக்கு வழங்குமாறு தேரர் கோரியுள்ளார் என்று சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலனாய்வு பிரிவினர்கள் தனக்குள்ள அச்சுறுத்தல் பற்றி விகாரைக்கு வந்து தெரியப்படுத்தியுள்ளனர் எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, பாதுகாப்பு கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு சபாநாயகர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் இணக்கத்துக்கு வந்துள்ளனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!