தமிழ்நாடு

தமிழகம் – புதுக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பல்லவராயர் காலத்து கல்வெட்டு

பல்லவராயர் காலத்து கல்வெட்டு ஒன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

அந்த மாவட்டத்திற்குட்பட்ட இலுப்​பூர் வட்​டம் மாராயப்​பட்​டியைச் சேர்ந்த கல்​லூரி மாணவி தீபி​கா, அங்​குள்ள கண்​டனி குளத்து வயல்​வெளி​யில் கற்பலகை ஒன்று காணப்படுவதாகவும் அதில் பழங்கால எழுத்துகள் இருப்பதாகவும் தகவல் தெரிவித்து இருந்தார்.

அந்தத் தகவலின்​பேரில், பேராசிரியர் முத்​தழகன், பாண்​டிய நாட்டு பண்​பாட்டு மையத்​தைச் சேர்ந்த தொல்​லியல் ஆர்​வலர்​கள் நாராயண​மூர்த்​தி, ராகுல் பிர​சாத் ஆகியோரைக் கொண்ட குழு அங்கு சென்று ஆய்வு செய்​த​போது, அந்த கற்பலகை பழங்கால பல்லவராயர் கல்வெட்டு என்பது தெரியவந்தது.

அதுகுறித்து பேராசிரியர் முத்தழகன் கூறும்போது, “மாராயப்​பட்டி கண்​டனி வயல்வெளி நடுவே கால​முனி கோயி​லின் எல்​லை​யாக வணங்​கப்​பட்டு வரும் கல் தூணுக்கு எதிரே கற்பலகை ஒன்று ஊன்றப்பட்டுள்ளதைக் கண்டோம்.

“அந்தப் பலகை மூன்றடி உயரம், இரண்​டே​கால் அடி அகலம் கொண்டதாக உள்ளது. அதன் ஒரு​புறத்​தில், ஆனந்த வருடம் ஆவணி 6ஆம் நாள் ஆரியூர் அழகிய சொக்​க​நாத சுவாமிக்கு சிவந்​தெழுந்த பல்​ல​வ​ராயர், கண்​டனி வயல்வெளி நிலங்​களை மானிய​மாக வழங்​கிய செய்தி எழுதப்​பட்​டுள்​ளது.

“மேலும், இந்த நில தானத்​துக்கு தீங்கு நினைப்​பவர்​கள் சிவதுரோகி​களாகக் கருதப்​படு​வர் எனவும் அந்தக் கற்பலகையில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது,” என்றார்.

கல்​வெட்​டில் குறிப்​பிடப்​பட்​டுள்ள சிவந்​தெழுந்த பல்​ல​வ​ராயர், கி.பி. 17ஆம் நூற்​றாண்​டில் புதுக்​கோட்டை மாவட்​டத்​தில் வெள்​ளாற்​றுக்கு வடக்கே உள்ள பகு​தி​களை ஆட்சி செய்த பல்​ல​வ​ராயர் மரபின் கடைசி அரசர் ஆவார்.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்