இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த நவம்பர் மாதம் 19 இலட்சத்து 51, 654 ஆக இருந்த கடன் அட்டைகளின் பயன்பாடு டிசம்பர் மாதம் 19 இலட்சத்து 70,130 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கடனட்டைகளின் பயன்பாடு வளர்ச்சி போக்கைக் காண்பித்துள்ளது.
(Visited 12 times, 12 visits today)