செய்தி

இலங்கையில் விற்பனை செய்யப்படும் பாஸ்மதி அரிசி தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் சட்டவிரோத வியாபாரங்களில் ஈடுபடும் குழுவொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வழங்கிய அனுமதியைப் பயன்படுத்தி இந்த மோசடி நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

பாஸ்மதி அரிசிக்கு நிகரான ஒரு வகை அரிசி இலங்கைக்கு குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்பட்டு சந்தையில் பாஸ்மதி அரிசி என விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாஸ்மதி அரிசியை எந்த நேரத்திலும் இலங்கைக்கு இறக்குமதி செய்ய முடியும், மேலும் ஒரு கிலோகிராம் அரிசிக்கு 300 ரூபாவுக்கும் அதிகமான வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்நாட்டில் 220 தொடக்கம் 250 ரூபா வரையில் விற்பனை செய்யக்கூடிய பாஸ்மதி அரிசிக்கு நிகரான அரிசி ஒரு கிலோகிராம் ஒன்றுக்கு 65 ரூபா வரி செலுத்தி இறக்குமதி செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

இது தொடர்பில், சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொடவிடம் விசாரணை நடத்தினார்.

இலங்கைக்கு வரும் அரிசி வகைகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்படும் போது மாத்திரமே அவை பாஸ்மதி அரிசி அல்ல என அடையாளம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு சுங்கத் திணைக்களத்திற்கு எவ்வித சட்ட அதிகாரமும் இல்லை எனவும், இது தொடர்பான அதிகாரம் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கே உள்ளது எனவும் சுங்கப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

(Visited 47 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி