இலங்கை செய்தி

சவேந்திரசில்வா தொடர்பில் விமல் எம்.பி வெளியிட்ட தகவல்

பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திராவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு காத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி, குருவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது பாராளுமன்ற உறுப்பினர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘நவய சம்துன சாஹே’ என்ற புத்தகத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி கடந்த நாள் அறிவித்திருந்தார்.

கடந்த வருடம் அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடல் மைதானத்தில் இடம்பெற்ற போராட்டங்களின் பின்னணியில் எழுதப்பட்ட இந்நூலின் ஆசிரியர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆவார்.

சவேந்திர சில்வாவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல்கள் தொடர்பிலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்கத் தூதரகத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து உரிய நூலில் வெளிப்படுத்துவதற்கு விமல் வீரவன்ச உழைத்திருந்தார்.

இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் இராணுவத் தளபதி வழக்குத் தாக்கல் செய்ய காத்திருப்பதாகவும் அதன் பின்னர் மேலும் பல உண்மைகள் வெளிவரும் எனவும் தெரிவித்தார்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content