ஐரோப்பா

பிரான்ஸில் ஆடைகள் தொடர்பில் மக்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட தகவல்

பிரான்ஸில் ஆடைகள், காலணிகளை வீசாமல் பழுதுபார்த்துத் தருபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திலிருந்து இந்த ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது பிரான்சில் ஆண்டுதோறும் 700,000 டன் ஆடைகள் வீசப்படுகின்றன. அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு குப்பை நிரப்புமிடங்களில் குவிகின்றன.

காலணியின் குதிகால் பகுதியைப் பழுதுபார்க்க வாடிக்கையாளர்களுக்கு 7 யூரோ வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடைகளைச் சரிசெய்து தருவோர் 10இலிருந்து 25 யூரோ வரை பெறலாம் என கூறப்படுகின்றது.

இவ்வாண்டு முதல் 2028ஆம் ஆண்டு வரை இந்தப் புதிய நடைமுறைக்குக் கைகொடுக்க 154 மில்லியன் யூரோ கொண்ட நிதி அமைக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!