ஆசியா

சிங்கப்பூரில் வீடுகளுக்காகக் காத்திருக்கும் இளம் குடும்பங்களுக்கு வெளியான தகவல்

சிங்கப்பூரில் இளம்பெற்றோர் இடைக்காலக் குடியிருப்புத் திட்டத்தில் வீடுகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காகும் என கூறப்படுகின்றது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இதனை தெரிவித்துள்ளது. தற்போது 2,000ஆக இருக்கும் அந்த வீடுகளின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டுக்குள் 4,000ஆக அதிகரிக்கப்படும்.

Selective En bloc Redevelopment Scheme (SERS) எனும் ஒட்டுமொத்த மறுமேம்பாட்டுத் திட்டத்துக்காகத் தங்ளின் ஹால்ட் (Tanglin Halt) பகுதியில் காலியாக இருக்கும் வீடுகள் PPHS திட்டத்துக்குக் கீழ் கொண்டுவரப்படும். புதிய வீடுகளைக் கட்டிமுடிக்கக் காத்திருக்கும் இளம்தம்பதிகளுக்கு PPHS வீடுகள் தற்காலிக வீடுகளாக அமைகின்றன.

பதினெட்டு வயதுக்குக் குறைவான பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர், குழந்தைக்காகக் காத்திருக்கும் இளம்பெற்றோர் ஆகியோருக்கு முன்னுரிமை தரப்படும்.

இளம்பெற்றோர் இடைக்காலக் குடியிருப்புத் திட்டம் 2013ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டது. அதுமுதல் இதுவரை அந்தத் திட்டத்தில் 4,200க்கும் அதிகமான குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன.

(Visited 6 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content