திருகோணமலை உட்பட பல இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு
மகாவெலி கங்கை ஆற்றுப் படுக்கையின் நீரேந்து பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் மழையின் காரணமாக, அடுத்த 48 மணிநேரங்களில் மகாவெலி கங்கைக்கரையோரமாக உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படும் சாத்தியம் உள்ளது.
இதன் கீழ் பின்வரும் பிரதேச செயலாளர் பிரிவுகள் அடங்கும்: கிண்ணியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிகந்த, லங்காபுர, தமன்கடுவ, மற்றும் திம்புலாகல. மேலும், மட்டக்களப்பு–பொலன்னறுவை பிரதான வீதி (கல்லெல்ல பகுதி), சோமாவதிய ரஜ மகா விகாரைக்கு செல்லும் பாதை, மற்றும் சோமாவதிய ரஜ மகா விகாரையை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய அபாயம் உள்ளது.

எனவே, சோமாவதிய ரஜ மகா விகாரைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்கள், அடுத்த சில நாட்கள் மேலதிக அறிவிப்பு வரும் வரை அந்தப் பகுதிக்குச் செல்லாமல் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும், மேற்கண்ட பகுதிகளில் மகாவெலி நதிக்கரையோரமாக வசித்து வரும் பொதுமக்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், வெள்ள அபாயத்திலிருந்து தங்களையும் தங்களின் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.





